300 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்!!

 


ஜம்மு – காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்  250 – 300 பயங்கரவாதிகள் ஊடுருவ நேரம் பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் சுரீந்தர் பன்வார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ கடந்த ஆண்டு  140 பயங்கரவாதிகள் நம் பகுதிக்குள் ஊடுருவினர்.

இந்த ஆண்டு பல்வேறு ஊடுருவல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 25 – 30 பயங்கரவாதிகள் இந்த ஆண்டு ஊடுருவி உள்ளனர்.

மேலும் 250 முதல் 300 பயங்கரவாதிகள் வரை  எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் காத்திருக்கின்றனர். கடும் பனிப்பொழிவு காலம் துவங்குவதற்கு முன் ஊடுருவ அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.