நாட்டில் விரைவில் தரவுப் பாதுகாப்பிற்கு சட்டம் இயற்றப்படும்!

 


நாட்டில் விரைவில் தரவுப் பாதுகாப்பிற்கு சட்டம் இயற்றப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தரவுப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய மையமாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

தொற்றுநோய் காலத்தின்போதும் கூட தகவல் தொடர்புத் துறை ஏழு சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. முக்கிய உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளைப் பெற்றுள்ளது.

இந்தியா மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தரவுகளை உருவாக்கும் மையமாக உள்ளது. நாட்டில் மிக விரைவில் தரவுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.