சிறுவன் தூக்கிட்டு தற்கொலை - இந்தியாவில் சம்பவம்


 தீபாவளிக்கு புதுசட்டை வாங்கித் தர மறுத்ததால் சிறுவன் ஒருவன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியா – திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தந்தையிடம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு புது சட்டை வாங்கி தரும்படி கேட்ட மகனுக்கு, தீபாவளிக்கு முதல் நாள் கட்டாயம் புத்தாடை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

எனினும் அவரால் புது புது சட்டை வாங்கி கொடுக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சிறுவனின் உடலை மீட்ட பொலிஸார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.