ஆமதாபாத்தில் நடைமுறையிலுள்ள இரவு நேர பொதுமுடக்கம் நீடிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆமதாபாத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பொதுமுடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.
குறித்த பொதுமுடக்கம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து பொதுமுடக்கம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் மக்கள் பொது சாலைகள், வீதிகள் அல்லது பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்த்து கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை