இந்தியா – மாலைத்தீவு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!!
இந்தியா – மாலைத்தீவு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, இரண்டு நாள் பயணமாக மாலைத்தீவு சென்றுள்ளார். இதன்போது அந்நாட்டின் அதிபர் மற்றும் வெளியுறவு செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு சுற்றுலாவை ஊக்குவிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மாலைத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து 3 தீவுகளை இணைக்கும் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு இந்தியா 700 கோடி ரூபாய் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மாலைத்தீவில் மண் மற்றும் தாவரங்கள் பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை