சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது!


சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது.

அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இதன்போது பக்தர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜையை ஒட்டி கோவில் நடை மீண்டும் 15 ஆம் திகதி திறக்கப்படும். மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 2020-2021 ஆண்டுகளுக்கான புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு சடங்கு நடைபெறும். அன்றைய தினம் சபரிமலை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 16-ந் திகதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்கள். தொடர்ந்து அதிகாலை முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.