ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது!


ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8 மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோட்டா, ஜெய்ப்பூர்,  ஜோத்பூர்,  பிகானீர், உதய்பூர், பில்வாரா, நாகோரே,  பாலி, தோன்க்,  சிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் போது சமூக அரசியல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.