யாழ்.பல்கலைக்ககழகத்தில் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை!


யாழ் பல்கலைக்கழக வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை ஆறு மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

இதனையறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என மாணவர்களுக்கு தெரிவித்தனர்.

அத்துடன், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு அறிவுறுத்திய பொலிஸார், தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மேலும் , பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.