யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றுமுதல் பி.சி.ஆர் பரிசோதனைகள்!!

 


யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படா த வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு மருத்துவ பீடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியான வழி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பட்டுள்ளது.

மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ.முருகானந்தன், மு.கலாமதி மற்றும் பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் அவர்களுடன் பணியாற்றுவதற்காக யாழ். பல்கலைக் கழகத்தினால் நான்கு நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களும் புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றது.

இந்த நிலையில் அதனை தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்திலும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.