பெண்ணினால் ஏமாற்றப்படும் பணக்கார வர்த்தகர்கள்


திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ஆமி சம்பத் என்பவரின் சட்டரீதியற்ற மனைவியென கூறப்படுகின்ற பெண் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வாகன மோசடி பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இப்பெண் பணக்கார வர்த்தகர் ஒருவருடன் நெருங்கி பழகி தமது பயன்பாட்டிற்கு வாகனங்களை பெற்று மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் கிரிபத்கொட பகுதியில் வர்த்தகர்களுடன் பழகி இவ்வாறு வாகனங்கள் கடத்தப்பட்டதாக நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மோட்டார் கார் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டதுடன் அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அப்பெண் செய்த மோசடி வர்த்தகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதேவேளை திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ஆமி சம்பத் என்பவரினது மோட்டார் காரும் இப் பெண்ணின் வீட்டிலிருந்து மீரிகம பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.