தலாத்துஓயா நகரம் வழமைக்கு திரும்புகிறது!!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  மூன்று நாட்கள் முடக்கப்பட்டிருந்த தலாத்துஓயா நகரம் மீண்டும் திறக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தலத்துயோ வர்த்தகர்கள் சங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் நகரத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது முடக்கம் நீக்கப்பட்டவுடன்,  ஏராளமான மக்கள் நகரத்திற்கு வருகை தர ஆரம்பித்துள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே கடை உரிமையாளர்கள், சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக  வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து 14 ஆயிரத்து 285ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 370 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.