மறைத்து வைக்கப்பட்ட 1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!

 


புத்தளம் - மன்னார் வீதியில் உள்ள களஞ்சிய சாலையொன்றில் மறைத்து வைக்கப்பட்ட 1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தக நபர் புத்தளத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

புத்தளம் தம்பபண்ணி கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் பொலிசாருடன் இனைந்து கடற்படையினர் நேற்று (25) இரவு புத்தளம் இரண்டாம் கடைப் பகுதியில் அமைந்துள்ள உப்பளம் ஒன்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, குறித்த உப்பள களஞ்சியசாலையில் 25 மூடைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்ட 1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெருமதியானவை என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக புத்தளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.