யாழ் மாவட்டத்தில் கடும் மழை - மக்கள் பாதிப்பு


யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

கடந்த 15 ம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தின் காரணமாக 22குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும்

நல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய்,கரவெட்டி ,பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டஅனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.