சிங்கராஜ வனம் விஸ்தரிப்பு!


இலங்கையின் ஈரவலய வனங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கராஜா வனாந்திரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 11,000 ஹெக்டேராக இருந்த சிங்கராஜ வனாந்தரத்தை 36,474 ஹெக்டேராக விஸ்தரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி நேற்று அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த உலகை நேசிக்கும் தம்மைப்போன்ற இதயம் கொண்ட அனைவரும் மகிழ்ச்சியடைய முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உலகிலுள்ள 10 பிரதான மழைக் காடுகளில் ஒன்றான சிங்கராஜ வனாந்தரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் தம்முடன் கருத்துக்களை பகிர்ந்த சூழலியலாளர்கள் மற்றும் சுற்றாடலை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி கூறுவதாக மேலும் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்காக இந்த உன்னதமான பூமியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.