5 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கிலோ மஞ்சள் விற்பனை!!

 


மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் மறைத்து வைத்து நாளுக்கு நாள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விலை தொடர்பாக உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் 100 கிராம் 400 ரூபாய் குதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதற்கு அமைவாக 1 கிலோ மஞ்சள் தூள் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி கட்டுப்பாட்டு விலையுடன் விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக மன்னார் ஊடாக கடத்தி வரப்படுகின்ற மஞ்சள் கட்டிகள் மன்னாரில் உள்ள வர்த்தகர்கள் சிலருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை தூளாக்கி அதி கூடிய விலைக்கு அவர்கள் விற்பனை செய்து வருவதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.