மாவீரர் தினத்தின் அஞ்சலி குறித்து நீதிமன்றத்தை நாடிய தாய்!
மாவீரர்தினத்தின் உயிரிழந்த தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதை தடைசெய்யக்கூடாதென பொலிசார், சுகாதாரத்துறையினருக்கு எழுத்தாணை கட்டளை வழங்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாயொருவரால் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்) அவர்களின் தாயாரான கம்பர்மலை சின்னத்துரை மகேஸ்வரி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்த உறவுகளிற்கு அஞ்சலிப்பதை தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் பயங்கரவத தடைச்சட்டங்களின் மூலம் தடைசெய்யக்கூடாதென பொலிசார், சுகாதாரத்துறையினருக்கு எழுத்தாணை கட்டளை வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கட்டளையை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு வழங்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை