நாளை முதல் வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்!!

 


மேல் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் அனைத்து அலுவலக ரயில்களையும் நாளை முதல் இயக்கப் போவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படாத பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத பொது முகாமையாளர் டிலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி நாளை தொடக்கம் காலை ,மாலை அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பிரதான ரயில்பாதையில் உள்ள தெமட்டகொடை, களனி,வனவாச ,ஹந்தரமுல்ல உப ரயில் நிலையம்,ஹோரபே உப ரயில் நிலையம் மற்றும் ராகம,வல்பொல உப ரயில் நிலையம், படுவத்த உப ரயில் நிலையம் ஆகியற்றிலும், புத்தளம் ரயில் வீதியில் பெரலந்த உப ரயில் நிலையம், ஜா - எல ,குருஸ,குரன உப ரயில் நிலையம் மற்றும் மீகமுவ ,கவ்டுவ உப ரயில் நிலையத்திலும், கரையோர ரயில் பாதையில் உள்ள பாணந்துரை மற்றும் பின்வத்த உப ரயில் நிலையம் களனி வழி ரயில் பாதையில் உள்ள பேஸ்லைன்,கொட்ட ரோட் ஆகிய ரயில் நிலையங்களிலும். குருநாகலை ரயில் நிலையத்திலும் ரயில்கள் மறு அறிவித்தல் விடுக்கும் வரை நிறுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பஸ் சேவைகளும் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தனிமைப்படுத்தல் பகுதிகளில் பஸ்களும் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.