காயமடைந்த மதகுரு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


 யாழ்ப்பாணம் முள்ளி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மதகுரு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றிருந்தது.

உயிரிழந்தவர் மணியந்தோட்டம் அரியாலை பகுதியைச் சேர்ந்த அந்தன் ரமேஷ் சயந்தன் (வயது 26) என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர் .

நேற்று மாலை குறித்த மதகுருவும் அவருடைய சகோதரர் ஒருவருமாக மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி சென்றுள்ளனர்.

இதன் போது இவர்கள் முள்ளி சந்தியில் வீதியின் வலது பக்கம் திரும்புவதற்கு முற்பட்டிருக்கின்றார். இதன் போது பின் பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் மதகுரு சயந்தன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தார். அத்துடன் அவரது சகோதரரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இருவரும் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேற்படி மதகுரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.