அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரின் தேர்தல் வாக்குறுதிப்படி அமெரிக்காவில் கொரோனாவைரஸை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.


இதற்கமைய,  13 பேர் அடங்கிய குழு ஒன்றை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

இந்த குழுவில் இந்திய வம்சாவெளியை சேர்ந்த வைதியர்கள் மூவர் இடம்பிடித்து உள்ளனர். அதில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட செலின் கவுன்டர் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் செலின் கவுண்டர் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலையம் கிராமத்தை சேர்ந்த ராஜ் நடராஜன் கவுண்டர் என்பவரின் மகளாவார். இவர் நோய் தொற்று அறிவியில் பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்கிறார். மேலும் இவர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் பயின்று நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசரியராக பணியாற்றி வருகிறார். 

அத்துடன் இக் குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வைத்தியர் விவேக் மூர்த்தி மற்றும் வைத்தியர் அதுல் கவாண்டே ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.