இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 76 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இது அமெரிக்காவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அத்துடன் 5 இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று ஒரேநாளில் 37 ஆயிரத்து 592 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களில் பதிவாகிய தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட குறைவாகும். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 82 இலட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் 497 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை