கொரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

 


கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தன்னிச்சையாக மாநில அரசுகள் முடிவு செய்ய இயலாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துவதற்காக இந்தியாவில் நான்கு வகையான தடுப்பூசி பரிசோதனை நடந்து வருகின்றன.

அதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மத்திய அரசு தடுப்பூசி வினியோகத்துக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தடுப்பூசிகளை இருப்பு வைப்பது, முதலில் யாருக்கு கொடுப்பது என்பது போன்ற பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசு அடுத்தடுத்த ஆலோசனைகளையும் நடத்தி புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிகளை தன்னிச்சையாக கொள்முதல் செய்து பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தடுப்பூசி விநியோகத்தையும் தன்னிச்சையாக மாநில அரசுகள் முடிவு செய்ய இயலாது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு விநியோக பணிகளை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தடுப்பூசி பயன்படுத்துவது மற்றும் விநியோக திட்டங்களை மத்திய அரசின் நிபுணர்குழு முடிவுக்கு ஏற்பவே செயற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.