நடிகை குஷ்பு கைது!


 வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக கடலூர் சென்ற நடிகை குஷ்புவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தடையை மீறி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று கடலூரில் வேல் யாத்திரை மேற்கொள்வதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடலூர் பொலிசார் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

தடையை மீறி யாத்திரை நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்று கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற பாஜக-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு விபத்தில் சிக்கினார்.

குஷ்பு சென்ற கார் மீது டேங்கர் லொறி மோதி விபத்துக்குள்ளாது.

விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறிய குஷ்பு, கடலூர் வேல் யாத்திரை பங்கேற்பதற்கான தனது பயணம் தொடரும் என கூறினார்.

இந்நிலையில், வேல் யாத்திரையில் பங்கேற்க கடலூர் சென்ற நடிகை குஷ்புவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த குஷ்பு தற்போது சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.