இன்று மெனிங் சந்தைக்கு சென்ற விபாரிகளுக்கு ஏமாற்றம்!!
கொழும்பு மெனிங் சந்தையில் வியாபாரிகளை உள்ளே செல்ல பொலிஸார் அனுமதிக்காததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேல் மாகாண ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நீக்கப்படும் என்பதுடன் மெனிங் சந்தையும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் மொத்த வியாபாரிகள் பலரும் இன்று அதிகாலை ஊரடங்கு நீக்கப்பட்ட பின் வர்த்தக நடவடிக்கைக்காக மெனிங் சந்தைக்குள் பிரவேசிக்க சென்றபோது பொலிஸார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர் வர்த்தகர்கள் வீதியோரங்களில் தங்களது மரக்கறிகள் மற்றும் விற்பனை பொருட்களை விற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை