குழந்தையை விட்டுவிட்டு தாய் தப்பியோட்டம்!!

 


மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்த தாய் பெண் குழந்தையை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் குழந்தை பிரசுவிப்பதற்காக கடந்த செட்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

மேலும் அந்த குழந்தை எடை குறைவு காரணமாக கண்ணாடி பெட்டியில் வைத்து வைத்தியர்களின் கண்காணிப்பில் குழந்தையை பராமரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்த குழந்தையின் தாயார் காணாமல் போயுள்ளார்.

அவரை வைத்தியசாலையில் தேடிய போது அவர் காணாமல் போன நிலையில், அவர் வீட்டிற்கு சென்று திரும்புவார் என வைத்தியர்கள் எதிர்பார்த்தனர்.

எனினும் அவர் மீண்டும் வைத்தியசாலைக்கு வராமல் போனதையடுத்து குறித்த குழந்தையை விட்டுவிட்டு தாய் தப்பியோடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளதையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த தாயை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.