தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மரணம்!


 பொகவந்தலாவ பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெம்பியன் கீழ் பிரிவை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 69 வயதுடைய கந்தையா தெய்வானை என்பவரே இன்று காலை மரணமானதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

மரணமானவரின் மகளும் பேரப்பிள்ளையும் கடந்ந 16 ஆம் திகதி பத்தரமுல்ல பகுதியிலிருந்து வந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 06 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலே இவர் திடீரென மரணமாகியுள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு கேஸ்ட்ரிக் வருத்தம் மாத்திரமே இருந்ததாகவும் தோட்ட வைத்தியசாலையில் அதற்கான மருந்து எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் சடலம் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் மாதிரி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் பி.சி. ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த குடியிருப்பு பகுதிக்கு தற்போது தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.