மேலும் ஐவரின் உயிரையெடுத்தது கொரோனா!


 இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (17) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 66 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.