உண்மைக்குப் புறம்பான செய்தி- பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!


பிரதமர் அலுவலகத்திலோ அல்லது அலரி மாளிகையிலோ எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, அலரி மாளிகையின் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் கடமைகளுக்காக அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரமே அழைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.