எங்க வீட்டு மாடியிலதான் கீர்த்திசுரேஷ் இருக்காங்க - விஜய் நண்பரின் மனைவி!

 


தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னுடைய வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷ் குடியிருப்பதாக கூறினார். இந்த பேட்டியில் ப்ரீத்தி கூறியதாவது:


கேரளாவில் இருந்து சென்னைக்கு படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், சென்னையில் எங்கள் வீட்டு மாடியில் தான் சொந்த அபார்ட்மெண்ட் வாங்கினார். ஆரம்பத்தில் அவருக்கும் எங்களுக்கும் நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் இந்த கொரோனா ஊரடங்கு விடுமுறையில் நாங்கள் நெருங்கி பழகி விட்டோம்


கீர்த்தி சுரேஷுக்கு சைவ உணவு பிடிக்கும் என்பதால் நான் சைவ பிரியாணி உள்பட ஒருசில உணவுகளை செய்து அவர்கள் வீட்டுக்கு கொடுப்பேன். அதேபோல் எனது குழந்தைகளுக்கு கீர்த்தி சுரேஷ் சாக்லேட் தோசை செய்து கொடுப்பார். இந்த கொரோனா ஊரடங்கு எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது


கீர்த்தி சுரேஷ் எங்க அபார்ட்மெண்டுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன போதிலும் இந்த ஆண்டுதான் தீபாவளி அன்று அவர் சென்னையில் இருந்தார். இரு குடும்பத்தாரும் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடினோம் என்று ப்ரீத்தி கூறினார்.


மேலும் விஜய் படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் நாங்கள் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்ப்போம். அதேபோல் இந்த ஆண்டு ’மாஸ்டர்’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் தீபாவளியன்று ’மாஸ்டர்’ படத்தின் டீசரை பார்த்து ரசித்தோம். அந்த படத்தை தியேட்டரில் பார்க்க எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் வெறித்தனமான வெயிட்டிங் என்றும் ப்ரீத்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.