கவிதை மொழி!!
சொட்டுச் சொட்டாய் விழுகின்ற மழைத்துளி
சுகமாக தழுவிடும் குளிர்ந்த தென்றல்
விட்டுவிட்டுத் துடிக்கும் இதயத்தின் ஓசை
விளையாடி குலாவும் குழந்தைகளின் மொழி
பச்சையம் தரித்த பசுமை மரங்கள்
பழுத்து விழுகின்ற மஞ்சள் இலைகள்
உச்சிவெயிலில் துளிர்க்கும் வியர்வை
உறிஞ்சி சுவைக்கும் மிடறு தேநீர்
பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்
புன்னகை தவழும் அழகு முகங்கள்
காத்திருக்கும் காதலரின் சில நொடிகள்
கால்களை நனைக்கும் சின்னஞ்சிறு அலைகள்
பாட்டி உடலில் படர் சுருக்கம் - நல்ல
பாடலிலே மெய் மறக்கும் தருணம்
நாட்டில் காணும் காட்சிகள் அனைத்தும்
நாளும் வெளிவரும் அழகிய கவிதை..
பசிக்கின்ற போதே உணவு ருசித்திடும்
பகலிரவாக கற்பனை சிறகு விரித்திடும்
நேசித்துப் பார்த்திட கவிதை பிறந்திடும்
நெடுந்தொகைபோற் பல கவிதைகள் சிறந்திடும்..
தம்பலகமம் கவிதா.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை