வெளியானது யோகிபாபு-அஞ்சலி படத்தின் டைட்டில்!!

 


சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு மற்றும் அஞ்சலி நடிக்க உள்ளனர் என்ற செய்தி வெளியானதை நேற்றே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது


யோகிபாபு, அஞ்சலி நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘பூச்சாண்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை யோகிபாபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.



கிருஷ்ணன் ஜெயராஜ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.