அன்டிஜென் கருவியூடான கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்!

 


கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகள் இலங்கையில் இன்றுமுதல் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.


தேசிய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, விசேட மருத்துவர் சுதத் சமரவீர இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


இதன்படி, இன்றுமுதல் தெரிவுசெய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தப் பரிசோதனைகளை பயிற்சியளிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.


இந்தப் பரிசோதனையில், 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என சுதத் சமரவீர கூறியுள்ளார்.


இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு இலட்சம் துரித ஆன்டிஜென் பரிசோதனைக் கருவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.


அத்துடன், எதிர்வரும் வாரங்களில் மேலும் ஒரு இலட்சம் கருவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.