கண்டியில் மீண்டும் நில நடுக்கம் பதிவு!


கண்டி – திகன பிரதேசத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவான நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 5.42 மணியளவில் பதிவாகிய இந்த நில நடுக்கம், ரிக்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த மாதம் 18ஆம் திகதியும் இந்த பிரதேசத்தில் 2 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகி இருந்ததுடன், அதற்கு முன்னரும் அந்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.