கண்டியில் மீண்டும் நில நடுக்கம் பதிவு!
கண்டி – திகன பிரதேசத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவான நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 5.42 மணியளவில் பதிவாகிய இந்த நில நடுக்கம், ரிக்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த மாதம் 18ஆம் திகதியும் இந்த பிரதேசத்தில் 2 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகி இருந்ததுடன், அதற்கு முன்னரும் அந்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை