யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவனுக்கு கொரோனா தொற்று!


யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவனுக்கு கொழும்பு சென்றநிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வடக்கைச் சேர்ந்த குறித்த மாணவன், வெளிநாடு ஒன்றிற்குச் செல்வதற்காக கொழும்பு சென்ற நிலையில் கொழும்பு டேர்டன்ஸ் தனியார் மருத்துவமனையில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர், ஐந்து நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இணையவழி மூலம் மாத்திரமே கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, அவருடன் பழகிய குறித்த ஐவர் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்திவருவதுடன், மாணவனை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் வவுனியாவில் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பாகவும் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.