சீனாவின் இராஜதந்திரம்! கைச்சாத்தானது புதிய ஒப்பந்தம்!

 


சீனா - பாகிஸ்தான் தமது இராணுவ உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதல் போக்கு உச்சத்தில் உள்ள நிலையில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இராவல் பிண்டியில் உள்ள இராணுவ தலைமையகத்தை பார்வையிட்ட ஜெனரல் வே, பாகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்து பேசினார்.

இதன்போது இருவரும் புதிய இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது குறித்து சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சீனா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையேயிலான உறவுகள், தொழில் நுட்பம், உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பாகிஸ்தான் இராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்தச் சுற்றுப் பயணம் அமைந்தது. சர்வதேச மற்றும் பிராந்திய சூழல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இருப்பினும் இரு நாட்டு இராணுவ ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் இன்னும் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.