காலி வீதியில் பாரிய விபத்து!


காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்றா வாகன விபத்தொன்றில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன் , கர்ப்பிணி தாயொருவரும் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து மொரட்டுவை -எகொட உயன- புதிய காலி வீதியில் இடம்பெறுள்ளது.

இவ்விபத்தில் பரிதாபமாய் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி பெண்ணொருவர் பலத்த காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூவரும் பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் வேகமாக வந்த உந்துருளியொன்று மோதியதாலேயே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்தில் 7 வயது சிறுமியும் 1 வயதுடைய குழந்தையொன்றுமே உயிரிழந்துள்ளது.

இவ்விடயங்கள் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் அதிகளவான உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.