காலி வீதியில் பாரிய விபத்து!
காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்றா வாகன விபத்தொன்றில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன் , கர்ப்பிணி தாயொருவரும் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து மொரட்டுவை -எகொட உயன- புதிய காலி வீதியில் இடம்பெறுள்ளது.
இவ்விபத்தில் பரிதாபமாய் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி பெண்ணொருவர் பலத்த காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூவரும் பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் வேகமாக வந்த உந்துருளியொன்று மோதியதாலேயே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்தில் 7 வயது சிறுமியும் 1 வயதுடைய குழந்தையொன்றுமே உயிரிழந்துள்ளது.
இவ்விடயங்கள் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் அதிகளவான உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை