அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு பின் ஜோ பிடனுக்கு புடின் வாழ்த்து!


அமெரிக்கா புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதனை ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வாளர் குழு உறுதிசெய்ததற்கு பிறகு, ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவும் அமெரிக்காவும் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளன. வேறுபாடுகள் இருந்தபோதிலும், உலகம் தற்போது எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தீர்க்க உண்மையிலேயே பங்களிக்க முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது, மற்ற நாடுகள் வாழ்த்தியபோதும், அதன் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்காக காத்திருப்பதாக கிரெம்ளின் கூறியிருந்தது.

இந்தநிலையில் ஜோ பிடன் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு எந்த தடையும் இல்லை என எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழு உறுதிசெய்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.