அமெரிக்காவில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவு!
அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 18ஆயிரத்து 576பேர் பாதிக்கப்பட்டதோடு, இரண்டாயிரத்து 918பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக இரண்டு முறை நாளொன்றுக்கான பாதிப்பு, அமெரிக்காவில் இலட்சத்துக்கும் மேற்பட்டோரை கடந்திருந்த போதும், இதுவே இதுவரை பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித் முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை ஒரு கோடியே 45இலட்சத்து 35ஆயிரத்து 196பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு இலட்சத்து 82ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 55இலட்சத்து 71ஆயிரத்து 729பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26ஆயிரத்து 829பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை 85இலட்சத்து 61ஆயிரத்து 427பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை