பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஈழத்து பெண்!


பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரி, ஆஜித், ரியோ, சோம், கேபி, ஷிவானி, பாலாஜி, ரம்யா ஆகியோர் உள்ளனர்.

இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து அவர்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இதுவரை ஷிவானி, பாலாஜி, ரம்யா, சோம், ரியோவின் குடும்பத்தினர் வந்துள்ளனர். அத்துடன் இன்று கேபியின் அம்மா, ஆஜித்தின் அம்மா, சகோதரி மற்றும் ஆரியின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரமோ வீடியோவில்,

ஆரியின் மனைவியை கன்பெஷன் ரூமில் இருந்து அழைத்து வருகிறார் அவரது மகள். பின்னர் ஆரியுடன் அமர்ந்து பேசும் அவரது மனைவி, வீட்டில் எப்படி இருப்பீர்களோ அதேபோல் தான் இங்கேயும் இருக்கிறீர்கள். யாரையும் காயப்படுத்தாமல் விளையாடுவது எனக்குப் பிடித்திருக்கிறது என இலங்கைத் தமிழில் கூறுகிறார். அவரது மகள் தந்தையுடன் விளையாடி மகிழ்கிறார்.

இந்நிலையில் எப்போது ஆரியின் குடும்பத்தினர் வருவார்கள் என பிக்பாஸ் பார்வையாளர்கள் காத்திருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்.

மேலும் ஆரியின் மனைவியின் எளிமை மற்றும் அவரது பண்புகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளதுடன் நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.