ரத்த தானம் செய்தால் ஒரு கிலோ சிக்கன் இலவசம்!


மும்பையில் ரத்த தானம் செய்தால் ஒரு கிலோ சிக்கன் அல்லது பன்னீர் வாங்கிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிவசேனா கட்சியை சேர்ந்த மும்பை மாநகராட்சி உறுப்பினர் சமதன் சர்வங்கன் தான் இந்த அறிவிக்கை விடுத்துள்ளார்.

வரும் 16ஆம் தேதி புதிய பிரபா தேவியில் உள்ள மைதானத்தில் ரத்த தான முகாம் ஒன்றை நடத்தும் இவர் இந்த விசேஷமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது ரத்ததானம் செய்பவர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் வழங்கப்படும். அதுவே அவர்கள் சைவம் என்றால் பன்னீர் வழங்கப்படும். இந்த நிலையில் குறித்த விளம்பர போஸ்டர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சமதன்,

பொதுவாக ரத்த தானம் செய்வோருக்கு சான்றிதழ் கொடுக்கப்படும். ஆனால் வித்தியாசமான அதே நேரத்தில் ஜாலியாக ஒரு ரத்ததான முகாமை நடத்த நினைத்தோம். அதனால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன் இதன் காரணமாக அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.