லண்டனில் மலரும் வெள்ளைநிற கிறிஸ்மஸ் தினம்!
ஆர்ட்டிக்கில் காணப்படும் குறைந்த அழுத்தம் காரணமாக எதிர்வரும் வாரங்களில் அதிக பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த அதிகளவான பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் தடை ஏற்பட்டு அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
16ம் மற்றும் 25 ஆம் திகதிகளுக்கிடையிலான நாட்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சீரற்று காணப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய ஸ்கொட்லாந்தில் ஏற்கனவே பனிப்பொழிந்து வருவதுடன் 25ம் திகதி வரை தினந்தோறும் பொழிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் ஐந்து அங்குலம் வரை படர்ந்திருக்கும் என்பதுடன் இதே அளவு கிறிஸ்மஸ் தினத்திலும் பதிவாகும் என கூறப்படுகின்றது.
குறித்த தினத்தில் மேற்கு ஸ்கொட்லாந்திலும் 4 சென்றிமீற்றர் வரை படரக்கூடும்.
வெப்பநிலை மறை 7 சென்றிமீற்றர் வரை மத்திய ஸ்கொட்லாந்தில் டிசம்பர் 25ம் திகதி காலை பனிப் படர்ந்து வெண்மையாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்கொட்லாந்தில் 2 பாகை செல்சியஸ் வரை அடுத்த வியாழன் அன்று குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று நியூகாஸ்ட்டில் பூஜ்ஜியம் பாகை செல்சியஸில் வெப்ப நிலை பதிவாகக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லண்டன் உட்பட தென் பிராந்தியங்களில் 3 பாசை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை