மணமக்கள் கோலத்தில் சாமி தரிசனம் செய்த சரத்குமார்- ராதிகா!


அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவிலில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகாவுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அவரது மகள் வரலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட சரத்குமார், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

சரத்குமாருடன் அவரது மனைவியான ராதிகா சரத்குமாரும் வந்திருந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில், சிவகங்கையின் காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் எங்களுடைய குலதெய்வம் காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.

தற்போது, அந்த கோவிலுக்கு செல்ல இயலாத காரணத்தால், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை தரிசனம் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்டதால் நேர்த்திக்கடனாக, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை தரிசனம் செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.