உயர் நீதிமன்ற கட்டட வளாகத் தீ கட்டுப்பாட்டில்!


கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளர்.

உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து!

கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் 09 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.