கிழக்கில் மூன்றாவது கொரோனா மரணம் பதிவு!


கிழக்கில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூன்றாவது நபர் மரணமடைந்துள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் அழகைய லதாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மரணமடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 778கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் அழகையா லதாகரன்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.