கொழும்பில் இதுவரையில் 18000ற்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று!


இலங்கையில் நேற்றைய 
தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் – 19 இரண்டாவது அலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தவிர்த்து நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் அவிசாவெல ஆடைதொழிற்சாலையில் 83 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கண்டி மாவட்டத்தில் 89 பேர், களுத்துறை மாவட்டத்தில் 50 பேர், அம்பாறை மாவட்டத்தில் 42 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 27 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல கேகாலை மாவட்டத்தில் 19 பேர், குருணாகல் மாவட்டத்தில் 18 பேர், காலி மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 பேர், புத்தளம் மாவட்டத்தில் 02 பேர், மொனராகலை மாவட்டத்தில் 02 பேர், பதுளை மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.