மருதனார்மடத்தில் மேலும் பலருக்குத் தொற்று!


யாழ்ப்பாணம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஒன்பது பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று (புதன்கிழமை) 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே ஒன்பது பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் எட்டுப் பேருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஒன்பது பேரும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டவர்கள் என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மருதனார்மடம் சந்தையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னரான 20ஆவது நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.