கொரோனா தொற்றில் இருந்து மேலும் 520 பேர் குணமடைவு!
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 520 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 7 ஆயிரத்து 642 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 497 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 191பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை