கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!


நாட்டில் மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இலங்கையில் மேலும் 520 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 221 ஆக காணப்படுகின்றது.

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 614 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.