நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!


நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொலன்னவாவை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 28ஆம் திகதி கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணம் மாரடைப்பு, நீரிழிவு நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆணொருவர் நேற்று கொழும்பு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கான காரணம், கொரோனா வைரஸ் தொற்றுடன் மூளைக்குள் இரத்தப் போக்கு, உயர் இரத்த அழுத்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 85 வயது ஆணொருவர் கடந்த 30ஆம் திகதி கொழும்பு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கான காரணம் பக்டீரியா தொற்றுடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையாகும்.

அத்துடன், கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 71 வயது ஆணொருவர் நேற்று அவரது குடியிருப்பில் உயிரிழந்தார். இவரது, இறப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டமையாகும்.

மேலும், கொழும்பைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது இன்று உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியாவுடன் சுவாசக் குழாய் செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.