அமெரிக்காவில் கொரோனாவால் 2கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு!


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் இரண்டு கோடியே இரண்டு இலட்சத்து 16ஆயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மூன்று இலட்சத்து 50ஆயிரத்து 778பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்காவே விளங்குகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டு இலட்சத்து 34ஆயிரத்து 550பேர் பாதிக்கப்பட்டதோடு, மூவாயிரத்து 880பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 78இலட்சத்து 67ஆயிரத்து 419பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 29ஆயிரத்து 312பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு கோடியே 19இலட்சத்து 98ஆயிரத்து 794பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.