லத்வியாவில் கொரோனாவிலிருந்து 25000ற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!


லத்வியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லத்வியாவில் 25ஆயிரத்து 326பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 96ஆவது நாடாக விளங்கும் லத்வியாவில் இதுவரை 36ஆயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 559பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 511பேர் பாதிக்கப்பட்டதோடு, 44பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்து 445பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 56பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.